தேனி அருகேதனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி:4 பேருக்கு வலைவீச்சு


தேனி அருகேதனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறி:4 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 23 March 2023 6:45 PM GMT (Updated: 23 March 2023 6:46 PM GMT)

தேனி அருகே தனியார் நிறுவன ஊழியரிடம் வழிப்பறியில் ஈபட்ட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தேனி

சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் கு.ராஜபாளையம் மேற்கு தெருவை சேர்ந்தவர் முத்துச்செல்வம் (வயது 32). இவர், தேனியில் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் வினியோகஸ்தராக பணியாற்றி வருகிறார்.

கடந்த 21-ந்தேதி மாலையில் அவர், நிறுவனத்தின் பணத்தை வசூல் செய்துவிட்டு அம்மச்சியாபுரம்-அரண்மனைப்புதூர் சாலையில் தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். அவருடைய நண்பர் ஒருவரும் உடன் வந்தார். அப்போது 4 பேர் அந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். அவர்கள் அரிவாளை காட்டி மிரட்டி, முத்துச்செல்வம் மற்றும் அவருடைய நண்பரிடம் இருந்த 3 செல்போன்கள், ரூ.5 ஆயிரம் மற்றும் 2 புளூடூத் கருவி ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் முத்துச்செல்வம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story