திருவட்டார் அருகேமது விற்ற 2 பேர் கைது


திருவட்டார் அருகேமது விற்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 26 Jan 2023 6:45 PM GMT (Updated: 27 Jan 2023 9:50 AM GMT)

திருவட்டார் அருகே மது விற்ற 2 பேர் கைது

கன்னியாகுமரி

திருவட்டார்,

திருவட்டார் அருகே உள்ள குட்டக்குழி பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு மது விற்ற சுந்தர்ராஜ் (வயது72) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுபோல் ஆற்றூர் பகுதியில் மது விற்ற பென்னி (57) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 10 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story