திண்டிவனம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை


திண்டிவனம் அருகே  வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
x

திண்டிவனம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

விழுப்புரம்

திண்டிவனம்,

திண்டிவனம் அடுத்த வன்னிப்பேர், கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் பூமிநாதன் (வயது 27). சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூமிநாதன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்போில் பிரம்மதேசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story