திருச்செந்தூர் அருகேவாலிபர் தூக்கு போட்டு தற்கொலை


திருச்செந்தூர் அருகேவாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 31 July 2023 6:45 PM GMT (Updated: 31 July 2023 6:46 PM GMT)

திருச்செந்தூர் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே நடுநாலுமூலை கிணறை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மனைவி சந்திரகாந்தா. இவர்களுக்கு 2 மகன் மற்றும் 2 மகள் உள்ளனர். ரவிக்குமார் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதில் தந்தை இறந்த நாள் முதல் அவருடைய மகன் சரவண பாண்டியன் (வயது 22) மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலையில் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டின் மேல் பதிக்கப்பட்ட பனங்கட்டையில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ வீட்டுக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story