தூத்துக்குடி அருகேவிபத்தில் 2 பேர் படுகாயம்


தூத்துக்குடி அருகேவிபத்தில் 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அருகே விபத்தில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு நேசமணிநகரை சேர்ந்த செல்வம் மகன் முகேஷ் (வயது23). கூலி தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (65) என்பவரும் தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் ஸ்பிக்நகர் அருகே மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். அப்போது முன்னால் சென்ற ஆம்னி வேனை டிரைவர் திடீரென திருப்பினாராம். இதில் ஆம்னி வேன் மீது மொபட் மோதியதில், முகேஷூம், ஆறுமுகமும் படுகாயமடைந்தனர். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story