உத்தமபாளையம் அருகேமூதாட்டி வீட்டுக்குள் புகுந்த நாகபாம்பு


உத்தமபாளையம் அருகேமூதாட்டி வீட்டுக்குள் புகுந்த நாகபாம்பு
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையம் அருகே மூதாட்டி வீட்டுக்குள் நாகபாம்பு புகுந்தது.

தேனி

உத்தமபாளையம் அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்தவர் சுருளியம்மாள் (வயது 68). இவரது வீட்டின் அருகே கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளது. அந்த கற்குவியலில் இருந்து பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது. பின்னர் அந்த பாம்பு சுருளியம்மாளின் வீட்டுக்குள் திடீரென புகுந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சுருளியம்மாள், பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் அவர் விரைந்து வந்து வீட்டில் பதுங்கி இருந்த சுமார் 3 அடி நீள நாகப்பாம்பை லாவகமாக பிடித்தார். இதையடுத்து அவர், அந்த பாம்பை கோம்பை ராமக்கல் மெட்டு பகுதியில் உள்ள வனப்பகுதியில் விட்டார்.

1 More update

Related Tags :
Next Story