நீலமணிநாத சுவாமி கோவில் தேரோட்டம்

கடையநல்லூர் நீலமணிநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.
கடையநல்லூர்:
மேலக்கடையநல்லூர் பூமிநீளா சமேத நீலமணிநாத சுவாமி கோவில் பிரமோற்சவ விழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம் மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. 10-ம் நாளான நேற்று காலை சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவமும், தொடர்ந்து தேரோட்டமும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
இன்று (வியாழக்கிழமை) தீர்த்தவாரியும், நாளை திருக்கல்யாணமும் நடக்கிறது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





