கோவில் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை


கோவில் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை
x

கோவில் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

கரூர்

கரூர் மாவட்டம் புன்னம் பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் மதுரை வீரன் சாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் முன்னுரிமை வழங்குவது தொடர்பாக இரு சமூகத்தினர் இடையே பிரச்சினை இருந்து வருவதாகவும், உரிய நடவடிக்கை எடுக்க கோரி சில சமூகத்தைச் சேர்ந்த ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த வாரம் இருதரப்பைச் சேர்ந்தவர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் பேச்சுவார்த்தை பாதியில் முடிவுற்றது. இந்நிலையில் வேலாயுதம்பாளையம் போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு அரவக்குறிச்சி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயராமன் ஆகியோர் கொண்ட குழுவினர் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் ஹேமலதா ஆகியோர் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முழுமை பெறாமல் நின்று விட்டது.


Next Story