நெல்லை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு


நெல்லை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ரத்து: தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

இரட்டை ரெயில் பாதை ஆய்வு பணி காரணமாக நெல்லை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

நெல்லை-நாகர்கோவில் வழித்தடத்தில் நாங்குநேரி-மேலப்பாளையம் இடையே இரட்டை ரெயில் பாதை ஆய்வு பணி மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதன் காரணமாக நெல்லையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.35 மணிக்கு நாகர்கோவில் நோக்கி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06642) மற்றும் மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து இன்று காலை 10.35 மணிக்கு நெல்லை நோக்கி இயக்கப்படும் சிறப்பு ரெயில் (06643) ரத்து செய்யப்படுகின்றன.

அதேபோல நாகர்கோவில்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (16321) இன்றும், கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் (16322) நாளையும் ரத்து செய்யப்படுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story