நெல்லை: தனியார் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 27 பேர் படுகாயம், 4 பேர் கவலைக்கிடம்


நெல்லை: தனியார் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதி விபத்து - 27 பேர் படுகாயம், 4 பேர் கவலைக்கிடம்
x

நெல்லை அருகே ஆட்சிமடம் பகுதியில் தனியார் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 27 பேர் படுகாயமடைந்தனர்.

நெல்லை,

நெல்லை அருகே ஆட்சிமடம் பகுதியில் தனியார் பஸ்சும் வேனும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் இரண்டு வாகனங்களின் டிரைவர்கள் உட்பட 27 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 4 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் ஒன்று முக்காணி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ஆட்சிமடம் அருகே வந்த போது, திடீரென பஸ்சின் முன்பக்க டயர் வெடித்ததில் பஸ், எதிரே வந்த வேன் மீது மோதியது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துவிட்டு விருதுநகரில் உள்ள ஒரு கோவிலின் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நெல்லை வழியாக அந்த வேனில் வந்துள்ளனர்.

இந்த நிலையில் விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்தில் காயமடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக சிவந்திபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story