நெல்லை குவாரி விபத்து - 7ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி


நெல்லை குவாரி விபத்து - 7ஆவது நாளாக தொடரும் மீட்பு பணி
x

பாறை இடிபாடுகளில் சிக்கிய 6-வது நபரான ராஜேந்திரனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

நெல்லை,

நெல்லை அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள கல்குவாரியில் கடந்த 14-ந் தேதி பாறை சரிந்து விழுந்த விபத்தில் 6 பேர் சிக்கினர். இதில் முருகன், விஜய் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டு, பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். செல்வம், மற்றொரு முருகன், செல்வகுமார் ஆகியோர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டன.

பாறை இடிபாடுகளில் சிக்கிய 6-வது நபரான ராஜேந்திரனை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அவர் பெரிய அளவிலான பாறையின் நடுவில் சிக்கி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த மீட்புப் பணி 7-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.


Next Story