ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் நெல்லை மாணவர் தேசிய அளவில் முதலிடம் - அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து


ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் நெல்லை மாணவர் தேசிய அளவில் முதலிடம் - அமைச்சர் அன்பில் மகேஷ் வாழ்த்து
x

மாணவர் முகுந்த் பிரதீஷுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர் முகுந்த் பிரதீஷ், ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் அகில இந்திய தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். இதையடுத்து மாணவர் முகுந்த் பிரதீஷுக்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "ஜே.இ.இ. முதன்மைத் தேர்வில் நாடு முழுவதும் 11 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றார்கள்.

இவர்களுள் அகில இந்திய தரவரிசையில் (300/300) முதல் இடம் பெற்ற 23 மாணவர்களுள் ஒருவராகச் சாதனைப் புரிந்துள்ள மாணவர் முகுந்த் பிரதீஷ் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக விளங்கிய பள்ளி ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.




Next Story