புதிய குடிநீர் திட்டப்பணிகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்


புதிய குடிநீர் திட்டப்பணிகள் :  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
x

165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

திருப்பூர்,

தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு ரூ.1120.57 கோடி மதிப்பில் புதிய குடிநீர் திட்டப்பணிகள், ரூ.70.43 கோடி மதிப்பில் திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 165 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டு குடிநீர் திட்டத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்

மேலும் ரூ. 53.45 கோடி மதிப்பிலான புதிய பல்நோக்கு கூடம்,ரூ. 12.87 கோடி மதிப்பிலான புதிய பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்


Next Story