கோட்டூரில் இலங்கை தமிழர் முகாமில் ரூ.5.60 கோடியில் புதிய குடியிருப்புகள்


கோட்டூரில் இலங்கை தமிழர் முகாமில் ரூ.5.60 கோடியில் புதிய குடியிருப்புகள்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:45 AM IST (Updated: 18 Sept 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூரில் இலங்கை தமிழர் முகாமில் ரூ.5.60 கோடியில் புதிய குடியிருப்புகள்

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி வாயிலாக ஆனைமலை ஒன்றியம், கோட்டூர் இலங்கை தமிழர் முகாமில் ரூ.5.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 112 புதிய குடியிருப்புகளை திறந்து வைத்தார். இம்முகாமில் அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டினை கலெக்டர் கிராந்தி குமார் திறந்து வைத்து, முகாமில் உள்ளவர்களுக்குசமையல் பாத்திர தொகுப்புகளை வழங்கி பேசினார். அப்போது அவர், இலங்கைத் தமிழர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை தமிழக அரசு உறுதி செய்யும் என்று அறிவித்ததுடன், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்தும் அறிவித்தார். இலங்கைத் தமிழர்களுக்கு துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை, இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட திட்டங்கள் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. என்றார். இதில் பொள்ளாச்சி சப்-கலெக்டர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, கோட்டுர் பேரூராட்சி தலைவர் ராமகிருஷ்ணன், ஆனைமலை தாசில்தார் ரேணுகாதேவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் அருண், உதவி செயற்பொறியாளர் முனிராஜ், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் தாசில்தார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

1 More update

Next Story