ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கழிவறை


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கழிவறை
x

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு புதிய கழிவறை

தஞ்சாவூர்

கபிஸ்தலம் அருகே ஓலைப்பாடி ஊராட்சி பொன்பேத்தி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன் நிதியிலிருந்து ரூ. 5.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய கழிவறை கட்டிடம் கட்டப்பட்டது. இதற்கான திறப்பு விழா நேற்று ஊராட்சி மன்ற தலைவர் விஜய் பிரசாத் தலைமையில் நடைபெற்றது. துணைவட்டார வளர்ச்சி அலுவலர் முரளி முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் பிச்சை வரவேற்று பேசினார். இதில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் தாமரைச்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் சுமதி கண்ணதாசன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி கழிவறை கட்டிடத்தை திறந்து வைத்து பேசினர். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story