ஒன்றியக்குழு தலைவர்களுக்கு புதிய வாகனம்; அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்


ஒன்றியக்குழு தலைவர்களுக்கு புதிய வாகனம்; அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
x

ஈரோடு மாவட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர்களுக்கு புதிய வாகனங்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர்களுக்கு புதிய வாகனங்களை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

புதிய வாகனங்கள்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம், டி.என்.பாளையம், நம்பியூர், சென்னிமலை, பெருந்துறை ஆகிய 5 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்களுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் புதிய வாகனம் (ஜீப்) வழங்கப்பட்டு உள்ளது. இதற்கான நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ., மேயர் சு.நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு-ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 5 ஒன்றியக்குழு தலைவர்களிடமும் புதிய வாகனங்களுக்கான சாவியை வழங்கி, கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

பணிநியமனம்

நிகழ்ச்சியில் மகளிர் திட்டம், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய சமூக பாதுகாப்பு திட்டம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறை ஆகிய துறைகள் மூலம் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் 31 பேருக்கும் 8 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன உத்தரவையும் அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

இதில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.சந்தோஷினி சந்திரா, கூடுதல் கலெக்டர் மற்றும் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் டாக்டர் மனிஷ், மாநகராட்சி துணை மேயர் வி.செல்வராஜ், மகளிர் திட்ட இயக்குனர் மைக்கேல், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) செல்வராஜன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி ரங்கநாதன், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி கோதை செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரி பூங்கோதை, ஈரோடு தாசில்தார் ஜெயக்குமார், தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், மாநகர மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட துணை செயலாளர் ஆ.செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் மணிராசு, இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ஜெ.திருவாசகம், காங்கிரஸ் கட்சி மாவட்ட நிர்வாகிகள் ராஜேஸ், விஜயகண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story