திருட்டு மணல் ஒப்படைப்பு


திருட்டு மணல் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 9 Jan 2023 6:45 PM GMT (Updated: 9 Jan 2023 6:47 PM GMT)

திருட்டு மணல் ஒப்படைக்கப்பட்டது

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடியில் புதிய பஸ் நிலையம் அமைக்க கட்டுமான பணி நடைபெற்ற போது அந்த பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமான குத்தகைதாரர்கள் அருகே உள்ள இடத்தில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி உள்ளனர். இதுகுறித்து இளையான்குடி போலீசார் குத்தகைதாரர் சுப்பிரமணியன் என்பவரை கைது செய்தனர். தற்போது கனிம வள துறையினர் 2163 கன மீட்டர் மணல் திருடப்பட்டதாக அறிக்கை வெளியிட்டிருந்தனர். அந்த மணலை போலீசார் இளையான்குடி தாலுகா அலுவலகத்தில் வருவாய்துறையினரிடம் ஒப்படைத்தனர்.


Related Tags :
Next Story