சென்னையில் பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட மேயர் ஆர்.பிரியா


சென்னையில் பெண்கள் பங்கேற்கும் சைக்கிள் பேரணியில் கலந்து கொண்ட மேயர் ஆர்.பிரியா
x
தினத்தந்தி 28 May 2022 4:26 PM GMT (Updated: 28 May 2022 4:30 PM GMT)

பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி இன்று பெண்களுக்கான இரவு நேர சைக்கிள் ஓட்டும் பேரணி நடைபெற்றது.

சென்னை

சென்னை:

பாலின வேறுபாடு இல்லாமல் பெண்கள் இயல்பாக பொது இடங்களை உபயோகப்படுத்துவதற்காகவும், பெண்களின் பாதுகாப்பு எல்லோருடைய பொறுப்பு என்பதை உணர்த்தும் வகையிலும், 'சிங்கார சென்னை 2.0' வீதி விழாவின் ஒரு பகுதியாக, பாதுகாப்பான சென்னை என்ற கருத்தை வலியுறுத்தி இன்று பெண்களுக்கான இரவு நேர சைக்கிள் ஓட்டும் பேரணி நடைபெற்றது.

சென்னை இந்திரா நகர் பறக்கும் ரெயில் நிலைய நுழைவாயில் அருகில் நடைபெற்ற இந்த பேரணியை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த சைக்கிள் பேரணியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா கலந்து கொண்டு சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இந்த நிகழச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை கமிஷனர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story