என்எல்சி நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்


என்எல்சி நிறுவனத்திற்காக புதிதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் இல்லை - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்
x

என்எல்சி நிறுவனத்திற்காக புதியதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை என அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

கடலூர்,

தமிழக வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்எல்சி நிறுவனத்திற்காக புதியதாக நிலம் கையகப்படுத்தும் திட்டம் எதுவும் இல்லை. என்எல்சி நிறுவனத்திற்காக 25,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்போவதாக வரும் தகவல் உண்மை அல்ல என்றார்.

மேலும், 3,000 பேருக்கு என்எல்சி நிறுவனம் புதிய வேலை வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது. ஏற்கனவே நிலம் மற்றும் வீடுகளை இழந்தவர்களுக்கு, தற்போது கூடுதல் இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story