வடமாநில தொழிலாளி சாவு


வடமாநில தொழிலாளி சாவு
x

வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கரூர்

பீகார் மாநிலம் மீருவா ஹார்பூர் மேற்கு சாம்பாரன் அருகே உள்ள பாத்னா பகுதியை சேர்ந்தவர் ஜோகன் ஹஜ்ரா (வயது 53). இவர் தோகைமலை அருகே பொன்னம்பட்டியில் உள்ள தனியார் மாடன் ரைஸ்மில்லில் தங்கி தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் வேலைைய முடித்து விட்டு இரவு தூங்க சென்றார். அப்போது சிறிது நேரத்தில் ஜோகன் ஹஜ்ரா சோர்வடைந்து மயங்கி விழுந்தார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஜோகன் ஹஜ்ராவை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஜோகன் ஹஜ்ராவின் உறவினர் பிர்ந்திரா மாஹ்ரோ கொடுத்த புகாரின்பேரில், தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story