வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கவில்லையா? சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை சிறப்பு முகாம்


வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்கவில்லையா? சென்னையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை சிறப்பு முகாம்
x

சென்னை மாவட்டத்தில் வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் நாளை நடக்கிறது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சென்னை

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 1-ந் தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் அடையாள அட்டையினை ஆதார் எண்ணுடன் இணைப்பது தொடர்பான சிறப்பு முகாம் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

எனவே, இந்த சிறப்பு முகாமினை பயன்படுத்தி வாக்காளர், பொதுமக்கள் அனைவரும் தாமாக முன்வந்து வாக்குச்சாவடி நிலை அலுவலரை அணுகி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அடையாள அட்டை எண்ணை இணைத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், ஏற்கனவே இணையதளம் மூலமாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக வந்தபோது படிவம் 6பி, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அடையாள அட்டை எண் மற்றும் கைபேசி விவரங்களை வழங்கியவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ள தேவை இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story