நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு


நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 13 Jun 2023 6:45 PM GMT (Updated: 13 Jun 2023 6:47 PM GMT)

மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

மயிலாடுதுறை


மயிலாடுதுறை மாவட்ட பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் நீடூர், பெரம்பூர் மற்றும் கடலங்குடி ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் செய்யப்படும் பகுதிகளான நீடூர், மல்லியக்கொல்லை, வில்லியநல்லூர், கொண்டல், பாலாக்குடி, தாழஞ்சேரி, கொற்கை, அருண்மொழித்தேவன், கங்கணம்புத்தூர், மேலாநல்லூர், நடராஜபுரம், கீழமருதாந்தநல்லூர், மேலமருதாந்தநல்லூர், பொன்மாசநல்லூர், பெரம்பூர், கடக்கம், கிரியனூர், சேத்தூர், முத்தூர், எடக்குடி, பாலூர், கொடைவிளாகம், ஆத்தூர், கடலங்குடி, வானாதிராஜபுரம், சோழம்பேட்டை, மாப்படுகை, கோழிகுத்தி, முருகமங்கலம், திருமணஞ்சேரி, ஆலங்குடி ஆகிய ஊர்களுக்கும் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை மயிலாடுதுறை மின்வாரிய இயக்குதல் மற்றும் பராமரித்தல் செயற்பொறியாளர் சந்தானகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொறையாறு - செம்பனார்கோவில்

பொறையாறு, கிடாரங்கொண்டான் ஆகிய இடங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படும், பொறையாறு, தரங்கம்பாடி, சந்திரபாடி, திருக்கடையூர், பிள்ளைபெருமாநல்லூர், திருமெய்ஞானம், சங்கரன்பந்தல், இலுப்பூர், குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, வெள்ளைக்கோவில், புதுப்பேட்டை, தாழம்பேட்டை, மாணிக்கப்பங்கு, என்.என்.சாவடி, கண்னப்பமூலை.

அனந்தமங்கலம்- திருக்களாச்்சேரி

அனந்தமங்கலம், காழியப்பநல்லூர், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, காட்டுச்சேரி, காரம்பள்ளம், தேவானூர், விசலூர், மாங்குடி, தில்லையாடி, திருவிடைக்கழி, எடுத்துக்கட்டிசாத்தனூர், கண்ணங்குடி, கிள்ளியூர், டி.மணல்மேடு, மாத்தூர் ஆகிய பகுதிகளுக்கும், அதேப்போல் கிடாரங்கொண்டான், செம்பனார்கோவில், பரசலூர், ஆக்கூர், காலகஸ்திநாதபுரம், மடப்புரம் கருவி, செம்பதனிருப்பு, தலைச்சங்காடு முடிகண்ட நல்லூர் மற்றும் அதனை சார்ந்த கிராமங்களுக்கும் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என செம்பனார்கோவில் மின் உதவி செயற்பொறியாளர் அப்துல்வகாப் மரைக்காயர் தெரிவித்துள்ளார்.

சீர்காழி- கொள்ளிடம்

இதேபோல் சீர்காழி, தென்பாதி, வைத்தீஸ்வரன் கோவில், ஆச்சாள்புரம், அரசூர், எடமணல், கொள்ளிடம், புத்தூர், கொண்டல், பழையாறு, பழையபாளையம், திருமுல்லைவாசல், அகனி, வள்ளுவக்குடி, ஆதமங்கலம், பெருமங்கலம், திருப்புங்கூர், கன்னியாக்குடி, கதிராமங்கலம், எடக்குடி, வடபாதி, மாங்கனாம்பட்டு, மகேந்திரப்பள்ளி, புதுப்பட்டிணம், தாண்டவன்குளம், திட்டை, தில்லைவிடங்கன், தொடுவாய், செம்மங்குடி, அகரஎலத்தூர், மாதிரிவேலூர், குன்னம், பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என செயற்பொறியாளர் (பொறுப்பு) விஸ்வநாதன் தெரிவித்தார்.


Next Story