மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு


மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 July 2023 7:34 PM GMT (Updated: 13 July 2023 11:56 AM GMT)

மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

வல்லம், செங்கிப்பட்டி

திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந்தேதி (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் வல்லம், வல்லம் புதூர், மொனையம்பட்டி, குருவாடிபட்டி, நாட்டாணி, திருமலைசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகள் மற்றும் செங்கிப்பட்டி, புதுக்குடி,வெண்டையம்பட்டி, வளம்பகுடி, ராயமுண்டான்பட்டி, ராயராம்பட்டி, சானூரப்பட்டி, ஆச்சாம்பட்டி, பாளையப்பட்டி, செங்கிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 15-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தஞ்சை உதவி செயற்பொறியாளர் இளஞ்செல்வன் தெரிவித்துள்ளார்.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி துணை மின் நிலையத்தில் வருகிற 15-ந்தேதி(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் திருக்காட்டுப்பள்ளி, பழமாநேரி, கச்சமங்கலம், இளங்காடு, மாரனேரி, சுக்காம்பார், திருச்சென்னம்பூண்டி, கோவிலடி, நாகாச்சி, பூண்டி, வடுககுடி, வரகூர், கண்டமங்கலம், விஷ்ணம்பேட்டை, கூத்தூர், மகராஜபுரம், சாத்தனூர், வளப்பக்குடி, ஐம்பதுமேல் நகரம், கடம்பங்குடி, நடுக்காவேரி உள்ளிட்ட கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருவையாறு உதவி செயற் பொறியாளர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

கரந்்தை, திருவையாறு

தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் மின் பாதை பராமரிப்பு பணிகள் வருகிற 15-ந்தேதி நடைபெறுகிறது. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும்

கரந்தை, பள்ளிஅக்ரகாரம், பள்ளியேரி, திட்டை, பாலோபநந்தவனம், சுக்கான்திடல், நாலுகால்மண்டபம், அரண்மனை பகுதிகள், திருவையாறு, கண்டியூர், நடுக்கடை, மேலதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, திருவாலம் பொழில், விளார், நாஞ்சிக்கோட்டை, காவேரிநகர், வங்கி ஊழியர் காலனி, இ.பி.காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி தெரிவித்தார்.


Next Story