அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி


அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி
x
தினத்தந்தி 28 April 2023 6:45 PM GMT (Updated: 28 April 2023 6:46 PM GMT)

வேதாரண்யத்தில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

வேதாரண்யத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககத்தின் சார்பில், வட்டார ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எண்ணும், எழுத்தும் பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியை வட்டார கல்வி அலுவலர் ராஜாமணிக்கம், வட்டார வளமைய மேற்பார்வையாளர் அசோக்குமார், வட்டார ஆசிரியர் பயிற்சி நிலைய முதல்வர் பழனிசாமி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் நாகை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்கினர்.


Next Story