ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி


ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
x

நீடாமங்கலத்தில் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.

திருவாரூர்

நீடாமங்கலம்;

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் 1-ம் வகுப்பு முதல் 3-ம் வகுப்பு வரை கையாளும் இடைநிலை ஆசிரியர்களுக்கான 2 நாள் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியினை வட்டார கல்வி அலுவலர் சம்பத் தொடங்கி வைத்தார். மன்னார்குடி மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் சத்யா முன்னிலை வகித்தார். பயிற்சியை தொடக்க கல்வி அலுவலர் சவுந்தர்ராஜன் பார்வையிட்டார். வட்டார கல்வி அலுவலர் முத்தமிழன் ஆசிரியர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.பயிற்சியில் வகுப்பறையில் ஏற்படக்கூடிய சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும். மாணவர்களுக்கு எண் அறிவு மற்றும் எழுத்தறிவை எவ்வாறு மேம்படுத்த வேண்டும். கற்றல், கற்பித்தல் பொருட்களை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் போன்ற கருத்துக்கள் வழங்கப்பட்டது. பயிற்சியில் இடைநிலை ஆசிரியர்கள் 80 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை வட்டார வளமைய மேற்பார்வையாளர் சத்யா செய்திருந்தார்.


Next Story