ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி


ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி
x

ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி நடந்தது.

கரூர்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2023-24-ம் கல்வியாண்டிற்கான எண்ணும் எழுத்தும் (இரண்டாம் பருவம்) கரூர் ஒன்றிய அளவிலான 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான பயிற்சி நேற்று கரூர் பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த பயிற்சியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுமதி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் சுப்பிரமணியன், துணை முதல்வர் முருகபாண்டியன், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மணிவண்ணன், வட்டார கல்வி அலுவலர் அழகேசன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த பயிற்சி வகுப்பில் 4 மற்றும் 5-ம் வகுப்பு கற்பிக்கும் 136 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.


Next Story