ரெயில் முன் பாய்ந்து நர்சிங் மாணவி தற்கொலை


ரெயில் முன் பாய்ந்து நர்சிங் மாணவி தற்கொலை
x

சிங்கப்பெருமாள் கோவில் அருகே ரெயில் முன் பாய்ந்து நர்சிங் மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த திருக்கச்சூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பட்டு என்ற நிரோஷா (வயது 20). இவர், பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி நர்சிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நிரோஷாவை தினமும் அவரது தந்தை மாரிமுத்து, திருக்கச்சூரில் இருந்து சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையம் வரை மோட்டார் சைக்கிளில் கொண்டு வந்து விடுவார். நிரோஷா அங்கிருந்து கல்லூரிக்கு மின்சார ரெயில் மூலம் செல்வது வழக்கம். வழக்கம்போல் நேற்று முன்தினம் தனது மகளை ரெயில்நிலையத்தில் விட்டு விட்டு மாரிமுத்து வீட்டுக்கு சென்றார். சிங்கப்பெருமாள் கோவில் ரெயில் நிலையத்துக்கு வந்த நிரோஷா, திடீரென யாரும் எதிர்பாராத நேரத்தில் சென்னை கடற்கரை நோக்கி சென்ற விரைவு மின்சார ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, நிரோஷாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story