நடிகர் வடிவேலு தாயார் மறைவுக்கு ஓ.பன்னீர் செல்வம் இரங்கல்
நடிகர் வடிவேலு தாயார் மறைவுக்கு ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் வடிவேலு தாயார் மறைவுக்கு ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
நகைச்சுவை நடிகர் வடிவேலு தாயார் சரோஜினி அம்மையார் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக்கொள்கிறேன்
இவ்வாறு கூறியுள்ளார்.
Related Tags :
Next Story