ஓ. பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு


ஓ. பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி:  முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடும் தாக்கு
x

முன்னாள் முதல் - அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி என்று அதிமுகவின் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.

சென்னை,

முன்னாள் அமைச்சரும் அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓ பன்னீர் செல்வம் ஒரு சந்தர்ப்பவாதி. சசிகலாவை எதிர்த்து தர்மயுத்தம் தொடங்கிவிட்டு மீண்டும் அவர்களோடு சேர்ந்துள்ளார். திரைமறைவில் சந்தித்து கொண்டவர்கள் தற்போது பொதுவெளியில் இணைந்துள்ளனர்.

நாடகத்தை அரங்கேற்ற ஓ பன்னீர் செல்வமும் டிடிவி தினகரனும் கோடநாடு விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர். கோடநாடு வழக்கில் குற்றவாளிகளுக்கு திமுகவை சேர்ந்தவர்கள்தான் ஜாமீன் எடுத்து கொடுத்தனர். ஐஜி தலைமையில் 90 சதவீதம் வழக்கு விசாரணை முடிந்தநிலையில், ஏ.எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரியிடம் வழக்கு மாற்றபட்டது ஏன்? இவ்வாறு அவர் பேசினார்.


Next Story