மாணவிகள், ஆசிரியைகளுடன் ஆபாச வீடியோ சாட்டிங்.... உடற்கல்வி ஆசிரியரின் உல்லாச லீலை.. குமரியில் திடுக்கிடும் சம்பவம்


மாணவிகள், ஆசிரியைகளுடன் ஆபாச வீடியோ சாட்டிங்.... உடற்கல்வி ஆசிரியரின் உல்லாச லீலை.. குமரியில் திடுக்கிடும் சம்பவம்
x

மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்ததாக உடற்கல்வி ஆசிரியர் மீது புகார் எழுந்தது.

குமரி,

நாகர்கோவில் கோட்டார் வட்டவிளையை சேர்ந்தவர் சுந்தர்சிங் (வயது32). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். சுந்தர்சிங் கன்னியாகுமரி அருகே உள்ள தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இதனால் பள்ளிக்கூடத்தின் அருகே வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் இதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வரும் மாணவியிடம் ஆசைவார்த்தைகள் கூறி பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.

இந்தபுகாரின் பேரில் கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சுந்தர்சிங்கை கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து சுந்தர்சிங்கின் செல்போனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் பல பெண்களின் ஆபாச வீடியோக்கள் இருந்தன.

இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. சுந்தர்சிங் மாணவிகள் உள்பட பல இளம்பெண்களிடம் பழகி வந்தார். அவர்களிடம் வீடியோ காலில் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். அப்போது அவர்களிடம் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி ஆபாசமாக நிற்க கூறி அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார்.

பல மாணவிகளுடன் பழகியது மட்டுமின்றி அவர்களின் தாயாருடனும் தொடர்பு ஏற்படுத்தி கொண்டார். குறிப்பாக கணவர் வெளிநாட்டில் இருக்கும் பெண்களை குறி வைத்து அவர்களை தனது வலையில் வீழ்த்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்.

பல்வேறு தனியார் பள்ளிகளில் பணியாற்றிய சுந்தர்சிங், அங்குள்ள பல ஆசிரியைகளுக்கும் வலை விரித்துள்ளார். கல்லூரிகளுக்கு சிறப்பு பயிற்சியாளராக செல்லும் போது அங்குள்ள பேராசிரியைகளுடன் தொடர்பு ஏற்படுத்தி கொண்டு அவர்களுடன் செல்போனில் வீடியோ காலில் அத்துமீறிய காட்சிகளும் உள்ளன.

தற்போது இவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் அதை சைபர் கிரைம் போலீசாரிடம் கொடுத்துள்ளனர். மேலும் வீடியோக்களில் உள்ள பெண்களிடம் இருந்து புகார்களை வாங்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.


Next Story