ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது


ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய அதிகாரி கைது
x

ஊட்டியில் உழவர் உற்பத்தியாளர் நிலையம் அமைக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊரக புத்தாக்க திட்ட அலுவலக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி

ஊட்டி,

ஊட்டியில் உழவர் உற்பத்தியாளர் நிலையம் அமைக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊரக புத்தாக்க திட்ட அலுவலக அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

உழவர் உற்பத்தியாளர் நிலையம்

நீலகிரி மாவட்டம் ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாகம் உள்ளது. இங்கு தமிழக ஊரக புத்தாக்க திட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் மாவட்ட செயல் அலுவலராக இம்மானுவேல் என்பவர் உள்ளார். இங்கு உதவி அதிகாரியாக நவீன்குமார் (வயது 28) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்தநிலையில், தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 15 உழவர் உற்பத்தியாளர் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக பழங்குடியினர் விண்ணப்பித்து இருந்தனர்.

இதில் ஒரு குழுவை சேர்ந்த விவசாயி சிவலிங்கம் என்பவரிடம், செயல் அலுவலருக்கு ஒவ்வொரு குழுவும் ரூ.25 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என நவீன்குமார் கேட்டு உள்ளார்.

ரூ.25 ஆயிரம் லஞ்சம்

ஆனால், லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் சிவலிங்கம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்தார். இந்தநிலையில் நேற்று லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.25 ஆயிரம் பணத்தை விவசாயி சிவலிங்கத்திடம் கொடுத்து அனுப்பினர். ஊரக புத்தாக்க திட்ட அலுவலகத்தில் நவீன்குமாரிடம் பணத்தை கொடுத்தார். அப்போது அங்கு ரகசியமாக கண்காணித்த போலீசார் நவீன்குமாரை கையும், களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதாலட்சுமி தலைமையில் போலீசார் அலுவலகத்தில் சோதனை செய்தனர். தொடர்ந்து உழவர் உற்பத்தியாளர் நிலையம் அமைக்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய நவீன்குமாரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் லஞ்சம் வாங்க தூண்டுதலாக இருந்த மாவட்ட செயல் அலுவலர் இம்மானுவேல் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன


Next Story