காஞ்சீபுரத்தில் ஆட்சிமொழி சட்ட வார விழா


காஞ்சீபுரத்தில் ஆட்சிமொழி சட்ட வார விழா
x

காஞ்சீபுரத்தில் ஆட்சிமொழி சட்ட வார விழா 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது:-

தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பெற்ற 27.12.1956-ம் நாளை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாட வேண்டும் என்று அரசால் ஆணையிட்டுள்ளது. அதன் அடிப்படையில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 09-03-2023 முதல் 16-03-2023 வரை ஒருவார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப் பட உள்ளது.

ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா கொண்டாட்டங்களின் நிகழ்வுகளாக கணினித் தமிழ் விழிப்புணர்வுக் கருத்தரங்கம், ஆட்சிமொழி மின்காட்சியுரை, தமிழில் குறிப்புகள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர்ப்பலகைகள் அமைத்திடுவதற்கு வலியுறுத்தி வணிக நிறுவன உரிமையாளர்கள், வணிக நிறுவன அமைப்புகளுடன் கூட்டம், பட்டிமன்றம், ஆட்சிமொழித் திட்ட விளக்கக் கூட்டம், விழிப்புணர்வுப் பேரணி ஆகியவை நடைபெற உள்ளன. தமிழ்நாடு அரசு வாரியங்கள், கழகங்கள், அரசு உதவிபெறும் அமைப்புகள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தமிழறிஞர்கள், தமிழார்வலர்கள், வணிகர் சங்கங்கள். பொதுமக்கள் என அனைவரும் ஆட்சிமொழிச் சட்ட வாரவிழா நிகழ்வுகளில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story