மூதாட்டி தற்கொலை


மூதாட்டி தற்கொலை
x
தினத்தந்தி 17 Jun 2023 7:39 PM GMT (Updated: 18 Jun 2023 5:14 AM GMT)

நெல்லை அருகே மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

திருநெல்வேலி

நெல்லை அருகே உள்ள கோபாலசமுத்திரத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி ஆதிலட்சுமி (வயது70). இவர் வயிற்று வலி காரணமாக சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆதிலட்சுமி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story