மொபட் திருடிய முதியவர் கைது

பாளையங்கோட்டையில் மொபட் திருடிய முதியவர் கைது செய்யப்பட்டார்.
பாளையங்கோட்டை தியாகராஜநகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன் (வயது 63). இவர் தனது மொபட்டை தியாகராஜநகரில் உள்ள பள்ளிவாசல் அருகே நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது மர்மநபர் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் நடத்திய விசாரணையில் மேலப்பாளையம் கொடிக்குளத்தை சேர்ந்த அப்துல்காதர் (62) என்பவர் மொபட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து, மொபட்டை பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





