போக்சோவில் முதியவர் கைது

புளியங்குடியில் போக்சோ சட்டத்தில் முதியவர் கைது செய்யப்பட்டார்.
புளியங்குடி:
புளியங்குடி அடிவெட்டி தெருவை சேர்ந்தவர் கடற்கரை (வயது 60). இவர் ஒரு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர்களிடம் சிறுமி கூறியதை தொடர்ந்து பெற்றோர்கள் உடனடியாக புளியங்குடி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி மற்றும் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு கடற்கரை பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கடற்கரையை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





