முதியவர் விஷம் குடித்து தற்கொலை


முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x

இரணியல் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

இரணியல் அருகே முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இரணியல் அருகே உள்ள கண்டன்விளையை சேர்ந்தவர் லாசர் (வயது 67). இவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு, ஒரு கால் துண்டிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த லாசர் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லாசர் ஏற்கனவே இறந்துவிட்டார் என தெரிவித்தனர். இதுகுறித்து அவரது மகன் ஜாய்லாசர் இரணியல் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story