முதியவர் விஷம் குடித்து தற்கொலை


முதியவர் விஷம் குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 21 Jan 2023 6:45 PM GMT (Updated: 22 Jan 2023 2:35 PM GMT)

திருவட்டார் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி


திருவட்டார்:

திருவட்டார் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.

திருவட்டாரை அடுத்த மூவாற்றுமுகம் மங்காட்டு விளையை சேர்ந்தவர் ராஜேந்திரன்| (வயது 72). இவருக்கு மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உண்டு. மகளுக்கு திருமணமாகிவிட்டது. ராஜேந்திரன் உடலில் சர்க்கரை நோயின் பாதிப்பு தீவிரமாகி, கண்பார்வை குறைபாடு ஏற்பட்டு டயாலிசிஸ் செய்யும் நிலை ஏற்பட்டது. மேலும் இவரது மனைவி சற்று மனநலம் பாதிக்கப்பட்டும் இருந்தார். இதனால் மனவருத்தத்தில் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று ராஜேந்திரன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு ஆற்றூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் அடிப்படையில் திருவட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story