முதியவர் பிணம்


முதியவர் பிணம்
x

நெல்லை சந்திப்பில் முதியவர் பிணம் கிடந்தது

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் நேற்று முன்தினம் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சந்திப்பு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் திடியூர் வடக்கு இளையாமுத்தூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (வயது 80) என்பது தெரியவந்தது.

அதேபோல் சமாதானபுரம் பஸ் நிறுத்தம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பாளையங்கோட்டை பகுதி-2 கிராம நிர்வாக அலுவலர் ஜெயராமன் பாளையங்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story