வேன் மோதி முதியவர் சாவு

வேப்பனப்பள்ளி அருகே வேன் மோதி முதியவர் பலியானார்.
வேப்பனப்பள்ளி:
வேப்பனப்பள்ளி அருகே உள்ள பெரிய மணவாரப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பரமேசப்பா (வயது 75). விவசாயி. இவர் நேற்று கடைக்கு நடந்து சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது அந்த வழியாக வந்த வேன் முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதித்த போது முதியவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து வேப்பனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





