முதியவர் திடீர் சாவு


முதியவர் திடீர் சாவு
x

நெல்லையில் முதியவர் திடீரென்று இறந்தார்.

திருநெல்வேலி

கேரள மாநிலம் அரூர் கோட்ரெட் வீடு பகுதியை சேர்ந்தவர் ராய் (வயது 55). இவர் ஒருவரை கண் சிகிச்சைக்காக நெல்லையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு நேற்று முன்தினம் அழைத்து வந்திருந்தார்.

அங்கு கண் பரிசோதனை முடிந்த பிறகு, அவர்கள் இருவரும் ஆஸ்பத்திரி அறையில் தங்க வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென ராய்க்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை ஆஸ்பத்திரி ஊழியர்கள் ஆம்புலன்சில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story