கார் மோதி முதியவர் சாவு


கார் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 10 July 2023 12:15 AM IST (Updated: 10 July 2023 5:51 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதி முதியவர் பலியானாா்.

சிவகங்கை

திருப்புவனம்

திருப்புவனம் போலீஸ் சரகத்தைச் சேர்ந்தது லாடனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 70). விவசாயி. இவர் சம்பவத்தன்று திருப்பாச்சேத்தி சென்று விட்டு லாடனேந்தலுக்கு 4 வழிச்சாலையில் தனது மொபட்டில் வந்துள்ளார். நான்கு வழிச்சாலையில் இந்திரா நகர் விலக்கு அருகே வந்த போது பின்னால் வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இறந்தார். இச்சம்பவம் குறித்து திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார், கார் டிரைவரான ராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்கபுரத்தைச் சேர்ந்த சிவக்குமார் (39) மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Related Tags :
Next Story