விபத்தில் முதியவர் சாவு


விபத்தில் முதியவர் சாவு
x
தினத்தந்தி 30 Sep 2023 7:00 PM GMT (Updated: 30 Sep 2023 7:01 PM GMT)

தூத்துக்குடியில் விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அய்யனடைப்பு இந்திரா காலனியைச் சேர்ந்தவர் விநாயகம் (வயது 78). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று இரவு அந்தோணியார்புரத்தில் நடைபெற்ற கோவில் விழாவில் பங்கேற்பதற்காக வந்தார். அப்போது அவர் தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் விநாயகம் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story