விபத்தில் முதியவர் சாவு


விபத்தில் முதியவர் சாவு
x
தினத்தந்தி 26 May 2023 6:45 PM GMT (Updated: 26 May 2023 6:46 PM GMT)

திருவாடானை அருகே விபத்தில் முதியவர் இறந்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை சினேகவல்லிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 62). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் காரைக்குடியில் உள்ள மகன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருவாடானையை அடுத்த பாரூர் கிராமத்தின் அருகே திருச்சி- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது முன்னால் டிராக்டரை ஓட்டி சென்றவர் திடீரென்று நிறத்தி உள்ளார். அப்போது அந்த டிராக்டரில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஆனந்தன் படுகாயம் அடைந்தார். உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த போது ஆனந்தன் இறந்து விட்டதாக டாக்டர் தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் டிராக்டர் டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.


Related Tags :
Next Story