கல்குவாரியில் மூழ்கி முதியவர் பலி


கல்குவாரியில் மூழ்கி முதியவர் பலி
x

கல்குவாரியில் மூழ்கி முதியவர் உயிரிழந்தார்.

திருச்சி

சோமரசம்பேட்டை:

சோமரசம்பேட்டை அருகே புங்கனூர் நெடுமலை பகுதியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 73). இவர் தனது மகன் முருகேசனுடன் தனியாக வசித்து வருகிறார். ராமசாமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கண்ணில் புரை விழுந்ததால் பார்வை சற்று மங்கி விட்டது. நேற்று முன்தினம் முருகேசன் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்த போது ராமசாமியை காணவில்லை. பல்வேறு இடங்களிலும் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று வீட்டின் அருகே உள்ள கல்குவாரியில் ராமசாமியின் உடல் மிதப்பதை பார்த்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த போலீசார் முதியவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story