ரெயில் தண்டவாளம் அருகே முதியவர் பிணம்


ரெயில் தண்டவாளம் அருகே முதியவர் பிணம்
x

அரக்கோணம் அருகே ரெயில் தண்டவாளம் பகுதியில் முதியவர் பிணமாக கிடந்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்-சென்னை ரெயில் மார்கத்தில் மோசூர்-திருவாலங்காடு ரெயில் நிலையத்திற்கு இடையே தண்டவாளம் அருகில் 70 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக அரக்கோணம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story