கார் மோதி முதியவர் பலி

கார் மோதி முதியவர் பலியானார்.
தூத்துக்குடி மறவன்மடம் இந்திராநகரைச் சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 70). இவர் நேற்று முன்தினம் இரவு மறவன்மடம் சந்திப்பு அருகே தூத்துக்குடி- பாளையங்கோட்டை மெயின் ரோட்டை கடக்க முயன்றார். அப்போது, அங்கு வந்த கார் எதிர்பாராதவிதமாக தங்கராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த தங்கராஜை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





