வாய்க்காலில் பிணமாக கிடந்த முதியவர்


வாய்க்காலில் பிணமாக கிடந்த முதியவர்
x

வாய்க்காலில் பிணமாக கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரியலூர்

அரியலூர் நகரில் ஜயப்பன் ஏரி எதிர்புறம் சித்தேரி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடப்பதாக நேற்று அரியலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், அந்த பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story