மூதாட்டி தீக்குளித்து தற்கொலை


மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
x

திருவள்ளூர் அருகே மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்துக்கொண்டார்.

திருவள்ளூர்

மூதாட்டி

திருவள்ளூர் அடுத்த காக்களூர் பங்களா தோப்பு பகுதியில் தனது மகன் முத்துக்குமரன் என்பவரது வீட்டில் வசித்து வந்தவர் சரஸ்வதி (வயது 70). இவர் கடந்த 2 வாரங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முத்துக்குமரன் தனது மனைவி குழந்தைகளுடன் சென்னை கொளத்தூர் பகுதிக்கு சென்றார். அன்று மாலை சரஸ்வதி வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடலில் தீப்பற்றி எரிந்ததால் வலி தாங்க முடியாமல் சரஸ்வதி கூச்சலிட்டுள்ளார்.

சாவு

அவரது அலறல் சத்தம் கேட்டு வந்து பார்த்த அக்கம்பக்கத்தினர் திருவள்ளூர் எம்.ஜி.எம் நகரில் வசிக்கும் அவரது மகன் தர்மராஜ் என்பவருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர் சம்பவ இடத்திற்கு வந்து தாயார் சரஸ்வதியை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சரஸ்வதி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சரஸ்வதி உயிரிழந்தார். இதுகுறித்து திருவள்ளூர் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story