லாரி மோதி மூதாட்டி பலி


லாரி மோதி மூதாட்டி பலி
x

லாரி மோதி மூதாட்டி உயிரிழந்தார்.

திருச்சி

உப்பிலியபுரம்:

உப்பிலியபுரத்தை அடுத்துள்ள எரகுடி நேதாஜி நகரை சேர்ந்தவர் பாப்பாத்தி(வயது 77). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர் அப்பகுதியில் சாலையை கடந்து எரகுடி புறக்காவல் நிலையம் அருகே வந்தபோது, அவர் மீது நாமக்கல்லில் இருந்து டி.பாதர்பேட்டைக்கு ஜல்லிக்கற்களை ஏற்றச்சென்ற லாரி மோதியது.

இதில் சாலையில் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்த பாப்பாத்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ேமலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த செல்வராஜை(40) வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story