கார் மீது அரசு பஸ் மோதி டிரைவர் பலி


கார் மீது   அரசு பஸ் மோதி டிரைவர் பலி
x

கூடலூர் அருகே கார் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் டிரைவர் பலியானார்

தேனி

கூடலூரை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (வயது 35). கார் டிரைவர். நேற்று அதிகாலை நவநீதகிருஷ்ணன் தனது நண்பர்கள் 4 பேருடன் காரில் கம்பத்துக்கு சென்றார். காரை நவநீதகிருஷ்ணன் ஓட்டினார். கூடலூர்-கம்பம் தேசிய நெடுஞ்சாலையில், செல்வபுரம் பிரிவு அருகே கார் வந்து கொண்டிருந்தது. அப்போது கம்பத்தில் இருந்து குமுளி நோக்கி வந்த அரசு பஸ், கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் கார் சேதமடைந்தது. மேலும் நவநீதகிருஷ்ணன் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். மற்ற 4 பேரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். நவநீதகிருஷ்ணனை மீட்டு, சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து எண்டபுளி புதுப்பட்டியை சேர்ந்த அரசு பஸ் டிரைவர் முருகன் (49) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான நவநீத கிருஷ்ணனுக்கு நந்தினி (28) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story